Posts

Showing posts from January, 2021

நம்ம வாழ்க்கை எத நோக்கி பயணம் பண்ணுதுனே தெரிலயே...!

 விண்ணைத்தொட அறிவியல் வாயத்தான் பொளந்து நிக்க வீணாப்போன ஜனம் பள்ளிப்பிள்ளைய கட்டிவைக்க மண்ணைப் பொளக்கவரும் அரசியல் தான் திமிரிநிக்க மண்ணுல போறவனே காசத்தான் கடிச்சுத்திங்க எண்ணமுடியாத பலதுயர் சமூகத்தில் தங்கிநிக்க எதுவும் தெரியாம மது போதையில் மயங்கிநிக்க கண்ணமூடாம கணினித்துறை வளந்துநிக்க கனவத் தொலச்சவனே இ‌ப்படித்தான் காலம் போகுமோ..?

ஏக்கம் :

 எங்கு சென்றானோ என் மகன் என்று வருவானோ என தாய் என்னை நினைப்பானோ இல்லை மறப்பானோ என்னை ஏற்பானோ என காதலி என் கடனை அடைப்பானோ காசு சேர்ப்பானோ என்னை மீட்பானோ என தந்தை என்ன உழைப்பானோ என்ன இழப்பீடோ ஏதும் மறைப்பானோ என முதலாளி என் உயிராவோ என் உறவாவோ என்றும் நிற்பானோ என நண்பன் என்று அடைவேனோ என் இலக்கை நானோ இல்லை மறைவேனோ என நான் ஆக ஏக்கத்தின் வழியில் பயணிப்போம் வாரீர்...

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

 கலரு கொஞ்சம் தேறணும்னு கடல மாவ பூசிப்பாத்தேன் சந்தனத்த கரச்சுப்‌பாத்தேன் சாம்பலையும் போட்டுப்பாத்தேன் குங்கும பாலும் குடிச்சுப்பாத்தேன் பழத்தெ‌‌ல்லாம் பிழிஞ்சுப்பாத்தேன் பல கிரீமும் போட்டுப்பாத்தேன் பங்குனி வெயிலப்பாத்தேன் பல துணியும் கட்டிப்பாத்தேன் கருந்தோல் நிறத்துக்காரா கவலை என்ன விழித்துக்கோடா வெள்ளை அழகல்ல நிறமடா!!

இயல்பே இனிமை:

 சின்ன தூரலில் சிதறிய துளியாய் சிறுவன் கையில் உருகிய கோனாய் அழகிய மழையில் ஆடிய மயிலாய் அடர்ந்த வனத்தில் ஓடிய   புலியாய் ஆலம் விழுதில் கூடிய உறவாய் அதிசய புதையல் கண்ட மனமாய் பிறந்த பிஞ்சை பார்த்த கணமாய் இயல்பு வாழ்க்கை இனிக்கும் சுகமாய்...

ஒரு தேனியின் புலம்பல் 🐝:

 வந்த வழி தெரியவில்ல!  பூச்சிக்கொல்லி வாடையில வழி மறந்தேன் வாடகைக்கு வீடெடுத்தேன்! வாசமல்லி வாடயுள்ள ரோஜாக்குள்ள பூவும் பூத்துருச்சு!             வாடக வீடும் பூட்டீருச்சு தேனெடுக்க வந்த என்ன!             தெருவுல தான் நிறுத்திருச்சு நானொருத்தன் தான் இருக்கேன்!              பூக்களை காயாக்க காரணத்தோட தான் சொல்றேன்! கடைசிவரை எ‌ன்ன காப்பாத்துங்க...

கனவே வா 💭

 உடன் பிரியா தோழனே உனக்குள் நான் என்னைக் கண்டேன் கனவிலே எங்கெங்கோ கூட்டிச்சென்றாய் எவைஎவையோ காணச்செய்தாய் நிகழை வெறுக்கச்செய்தாய் கனவில் மிதக்கச்செய்தாய் இன்பம் மட்டும் தானே தந்து தந்து சென்ற கனவே நி போகாதே துன்பம் அது வந்தால் தூக்கம் தானே தீர்வு வழியே திசை மாறாதே தினத்தில் பாதி கடனாய் நான் தருகிறேன் தீராத துன்பம் வந்தால் தூக்கம் நி தறுவாயா?? கனவே நி வருவாயா??

தாய்மொழி

 காலம் பிறக்க காலம் பிறக்க கடந்து பிறந்தாய் கறந்த பால் போல அழுது பிறந்தாய் இவ்வுலகில் ஆடி எழுந்தாய் அதன் பிறகில் தேடி நடந்தாய் மிக விரைவில் ஓடி திரிந்தாய் உன் உலகில் பாடி மகிழ்ந்தாய் குழந்தை முடிவில் காலம் நடக்க காலம் நடக்க மிதந்து சென்றாய் நாவலின் பயணம் போல படிக்க சென்றாய் பின் விரைவில் பழகி சிரித்தாய் உன் உடனி‌ல் பலவும் காற்றாய் இப்பருவில் ஆடி மகிழ்ந்தாய் உன் இயல்பில் கூடி நெகிழ்ந்தாய் இளம் முடிவில் காலம் கடக்க காலம் கடக்க கரைந்து தெளிந்தாய் கடலின் உப்பை போல தேர்ந்து முடித்தாய் உன் படிப்பை தேர்ந்தெடுத்தாய் என் துடிப்பை தேற்றி திரித்தாய் என் இனத்தை ஈன்றெடுத்தாய் என் பிறப்பை காலம் நின்றது காலம் நின்றது கலங்கரை விளக்கை போல காட்டி ஊட்டிய முழு நிலவு‌ம் கடித்து உண்ட உன் உணவும் கரைந்து போகுமா நம் மனதில் காட்டிய வழியில் சென்றிடுவோம் காதலை உன்னிடம் தந்திடுவோம் காலம் வருகுது காலம் வருகுது வாடிய உன்னை தேற்றிடுவேனே பெற்றெடுத்து கற்றறிய வைத்தாய் நீயே கற்றறிந்த நான் உன்னை இனி பெற்றெடுத்து வளர்ப்பேனோ பேணி காப்பேனோ தெரியவில்லை. என்னை வளர்க்க உன் வாழ்வை தொலைத்தாய். நான் வளர்ந்தேன். இந்நாள் முதல் ...

காணாமலே போச்சு 😕

 வட்ட நிலவுல வட சுட்ட ஆயாக்கதை வானத்துல தெய்வமுன்னு பாத்து சொன்ன பழய படம் வாகனம் தான் வேணுமுன்னு வாங்கி ஓட்டின பழய டயர் வளந்து குட்டி தருமுன்னு பொத்தி வளர்த்த மயிலிறகு வாச்ச பாருங்கனு வாங்கி ஒட்டு ஜவ்வுமிட்டாய் வயித்துல செடி முளைக்குமுன்னு திங்காம விட்ட மாங்கொட்டை பொன்வண்ட பாருங்கனு பிடிச்சு வந்த வண்டுக்கூட்டம் இவை எல்லாம் எங்கன்னு தேடவேணாம் தொடர்ருங்க!!

கிணத்த காணோம்!

 துள்ளி குதிச்ச தெரு தூக்கந்தான் கண்டிருச்சு தூங்காமல் நாம் இருந்த நாட்களுந்தான் கடந்திருச்சு தூரத்துல நின்ன புளியமரம் தொப்புன்னுதான் விழுந்துருச்சு தண்ணீர தந்த குளம்  மண்ணுலதான் மூழ்கிருச்சு யார் யார சொல்லுறது இவ்வளவும்தான் மாறீருச்சு!!

வெற்றுக் காகிதம்

 பருவத்திலே மதுப் பழக்கம் பழகிய பின் புகைப்பழக்கம் பாலியலில் பருவத்தினர் பல இடத்தில் முதியோரும் பழகியதோர் திரைக்கவர்ச்சி பன்படுமோ நம் சமூகம் நாட்டினிலோர் கூட்டம் உண்டு நடிகர்களை நாடாள கூறிக்கொண்டு நோக்கம் கொண்டு வருவோரும் ஏக்கத்தோடு விடைபெறுவர் பலபடங்கள் செய்த பிழை காதல் ஆனது போதைப்பொருளாய் கண்டவுடன் காதலாம் காரணமின்றி மோதலாம் வெற்றுக் காகிதம் ஆனோமே வேதனையே இவை யாவுமே...

கனவிடம் காதல்.. விரட்டுகிறேன்

 கனவே விரையாதே விரைவில் உன்னை நான் விரட்டிப் பிடிப்பேன் நான் நகர நீயும் தூரம் நகர்கிறாய் நான் உறங்க நீ விழித்து ஓடுகிறாய் ஓடும் உன்னை நான் எப்படி பிடிப்பேனோ கொஞ்சம் ஓரம் நில் உடனே வருகிறேன் தடைகள் ஆயிரம் திசைக‌ள் பல்லாயிரம் அதனால் திகைக்கிறேன் விரைவில் திசை அறிவேன் கனவே காத்திரு!! நம் காதல் கைகோர்க்க..

தலைவலி

 என் தலைய உருட்ட எங்கிருந்து உதித்தாயோ மண்டையில ஏறி மத்தளந்தான் அடித்தாயோ துன்பம் வரும் வேளையில அவன் தோழனா நீ கைகோர்த்து வாரயில வாழ வேணாமுன்னு வாளெடுத்து வீசத் தோணுது மண்டையில கனகனக்க மத்ததெல்லாம் மறந்து நிக்க எந்தன் இயல்பு குணம் மாறி நிக்க எதையெதையோ நான் பேச.. பிரச்சனை தான் உன்ன பாத்தாக்கா உன்னை வழியனுப்ப வாரம் நாலு தைலம் நான் தேய்க்க வந்த வழி நீயும் போக இன்பத்துல வந்திருந்தா எப்படியோ நான் பாத்துருப்பேன் துன்பத்துல வந்த உன்ன வந்தவழி நான் துரத்துரேனே வலியால் வழி தெரியல...

காகித காசு

 தெரிந்த என்னை தெரியாது என்பாய்           தெரிந்தும் என்னை கடந்து செல்வாய்                  மறந்து என்னை மன்னி என்பாய்                மனிதம் ஒன்றை மறந்து  போவாய்                மனிதா காகித காசு கரைய கூடும்                 அதில் காந்தி கூட மறைய நேரும் காகிதத்தை கைவிடு!!!கனவுகளை கைதொடு

சென்னையில் ஒரு நாள்

 காலை எழுந்தவுடன் ஒரு ஓட்டம் பின்பு கணினிமுன்பு மெல்ல நோட்டம் மதியம் வந்தவுடன் ஒரு தூக்கம் பின்பு மாலை வருமென ஏக்கம் மாலை வந்தவுடன் கிளம்பிய கூட்டம் பின்பு இரவு வீடடையும் ஓட்டம் இரவு வந்தவுடன் ஒரு தாக்கம் என்ன வாழ்வோ இது ஏமாற்றம் பின்பு காலை வந்தவுடன் மாலை வந்தவுடன் என தொடரும் தொடரோட்டமே இவை முடிவுரை எழுதுங்கள்...                                      --- நான்

காதல் கனவோ

 இரவின் முதலில் ஈரக்காற்றில் இருகண் மூடி அவள் முகம் பார்த்தேன் பிரம்மன் சிலையோ பீம‌ன்‌ கதையோ எந்தன் துணையோ நீதானடி பிரிவோம் சேர்வோம் பிறர் மனம் பறிப்போம் நம் வாழ்விலடி காதலில் மூழ்கி அடித்தொட்டு வருவோம் ஆழம் பார்ப்போமடி கண்திரையை மூடி செவ்வாய் செல்வோம் சில நாளில் திரும்புவோமடி மனமது சேர்த்து காசி சென்று கரைப்போம் நம் கசப்பையடி ஐநா சபையில் அறப்போர் செய்வோம் எட்டாம் அதிசயம் நீதானடி உலகில் உள்ள அனைத்தும் மறைய உன்னை நினைத்து உலகம் படைத்தேன் எண்ணிப்பார்த்தால் உன் உலகம் தெரியும் என் மனம் புரியும் ஏக்கம் கண்ணில் ஏங்கச்செய்கிறாய் திரைகள் திறந்தேன் கனவோ நீ..

நாடு பிரித்து

 உலக நாட்டை கூறுபோட்டு உரிமைக்கொண்டோம் உலகத் தலைவர் போல எண்ணி கூடிநின்றோம் கோல் வீச குரங்கென ஓடி குதித்து நின்றோம் அருகில் நின்ற நாட்டைச்சொல்லி அடித்துக்கொன்றோம் இயன்ற அளவில் இன்னும் முயன்று பிறர் எல்லைப் பிடித்தோம் நாட்டை இழந்தவர் தம் வாய்ப்பைப் பெற்று மீண்டும் தொடர ஓர் கட்டத்துக்குள் பல நாடுகள் கட்டியெழுப்பினோம் நடுத்தர வீட்டுப்பிள்ளைகள் நாங்கள் நாடாண்ட கதை இதுவே!!

பிறந்தநாள் படைப்பை

 எண்ணிய யாவும் நிறைவேற உன்னை பிரிந்தவர் ஆன்மா வழிநடத்தட்டும் இடையில் வந்த இடர் அனைத்தும் இவ்விடமே உன்னை பிரிந்து செல்லும் என்றும் சிரிக்கும் உனக்காக, இன்று Emoji க்கள் சிரித்து மகிழ வைக்கும் Likes கள் குவிந்திடும் காற்றும் குயிலும் உன் பெயர் பாடும் இன்பக் கனியும் உன் சுவை தரும் பூவின் மனமோ உன் மனமாகும் வேரின் உறுதியே உன் குருதியாகும் கவிஞர்கள் வரிகள் உன்னைப் பாடும் புலவர்கள் பழமை உன்னைப் பேசும் அனைவரின் மனமும் உன்னைத் தேடும் மலர்கள் பூத்துக் குவியும் மழைச் சாரல் மண்வாசம் தரும் இவை யாவும் இன்றே அரங்கேறும் ஏனென்றால் உன் பிறந்தநாள்

இரவு

 சுட்டெரிக்கும் வெயிலும் சூடானா காற்றும் என்னிடம் இல்லை சுதந்திர புவியும் சுகம்தரும் அமைதியும்தான் என்னிடம் உண்டு கதறிடும் சாலையும் சலசல ஊளையும் என்னிடம் இல்லை காதல் பேச்சும் கனவின் வீச்சும்தான் என்னிடம் உண்டு தென்றல் காற்றும் தேன்நிலா பாட்டும் எந்தன் சிறப்பு நிலவின் ஒளியும் நிலக் குடையும் எந்தன் பொறுப்பு கூட்டில் இணைவர் குடும்பம் காணுவீர் குழப்பம் வேண்டாம் உறக்கம் கொள்வீர்..                   - இப்படிக்கு இரவு

ஆற்றங்கரை:

 பனித்துளி போல் படர்ந்த நீரைப் புற்கள் உருட்ட படர்ந்த நீர்த்துளி வடிந்த நீர்த்தாரை எட்ட வடிந்த நீர் வலிமைப் பெற்று ஓடை எட்ட ஓடை ஒற்றுமைக் கொண்டு ஓரிடம் சேர ஆறது ஆனாகதை பின்னர் பாதை மாற பள்ளம் விழ அருவியானவள் அவள் எளிய நீரது வலிய பாறையைப் பேக்க பலகாலம் தேக்க படர்ந்தது ஆற்று மணலோ எளிதில் அள்ளிவிட்டால் ஏது அவளோ! எவ்வழி சென்று சமுத்திரம் அடைவாளோ??

சிறைக்கூடம் (கைபேசி):

 என் இரவில் பங்கு கேட்கிறாய் எதை எதையோ காட்டிச் செல்கிறாய் இரவிலும் என் முகம் மிளிரச் செய்கிறாய் ஈரம் என் கண்ணில் வடியச் செய்கிறாய் எங்கும் உன்னைத் தூக்கிச் செல்கிறேன் எதற்கும் உன்னையே பார்த்துச் சொல்கிறேன் ஏனோ என்னை மறந்து செல்கிறேன் சிந்திக்கும் திறனை துறந்து செல்கிறேன் மறந்து உன்னைத் தூக்கி உதற மனமும் ஏனோ மறந்து போனது மயங்கிய நிலையில் மசமசத்துப் போனேனோ மாயாவனே நீ என்னை மயக்கும் திரையோ நானே உந்தன் அடிமை ஆனேனோ இல்லை நீயே என்னை அடக்கி ஆழ்கிறாயோ...

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்:

 அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: பல கோடி படைகளும் வேண்டாம் பல லட்சம் படைக்கருவிகளும் பதை பதைக்கும் எல்லையும் வேண்டாம் பதற்ற பேச்சும் நமக்குள் வேண்டாம் அணு ஆயுதம் கொண்டு வருவீரோ ஆபத்தான நோய் கொண்டு வருவீரோ தண்ணீர் தாகம் கொண்டு வருவீரோ தளர்ந்த மதம் கொண்டு வருவீரோ மூன்றாம் போருக்கு எதைக்கொண்டு வந்தாலும் நான்காம் போர் கற்கால ஆயுதத்தோடு  கடக்கும் இதன்கன்.. இவ்வுலகம் அழிந்து போகுமோ...??

சொற்க்கள் பலவிதம்

 குறுகிய இடத்தில் கொஞ்சவைக்கும் கொஞ்சம் உளறல் கெஞ்சவைக்கும் கோபம் கொண்டால்  கொட்டித்தீர்க்கும் குழப்பம் என்றால் உளறிக்கொட்டும் பாசம் கொண்டால் பல கவிதைபேசும் பதறி நின்றால் பலவை மறக்கும் சொற்கள் ஒன்றே சூழ்நிலைகள் பல சுதாரித்துக் கொள்ளுங்கள்...

தேநீர் இடைவேளை

 தென்னிசை செவியுடனும் தேநீர் கையுடனும் தெருவோரம் நடத்திடுவோம் நாள்தோறும் பொதுக்குழுவை கூடியதும் தொடங்கிடுமே சலசலக்கும் பல கதைகள் தொடங்கியதோ ஓர் தலைப்பில் தோன்றியதைக் கதைத்திடுவோம் சோகம்தான் கரைந்திடுமே தேநீர்தான் மருந்தெனவே முடித்திடுவோம் பொதுக்குழுவை கடைமூடும் மணியளவில்.

நிகழ்கால நிதர்சனம்:

 சொற் பல பேச சுதந்திரம் உண்டோ கற்பனை தீட்ட கவிநயம் உண்டோ கட்டுடன் வாழ வரையறை உண்டோ அறநெறி கற்க அறக்கட்டளை தான் உண்டோ எந்தம்மவர் வீரம் இம்மண்ணில் உண்டோ ஈகையது தியாகம் எவரிடம் உண்டோ பொழுதைப் போக்கும் வேலை கற்றபின் பொழுதுபோக்கே வேலையானது...எம்மினம் வீழ்ந்தது...

அழகிய அவள்

 இம்மண்ணில் தோன்றிய முதற் கணமே உன்னைக் கண்ணில் கண்டேனே நான் உன்னைக் கண்ணில் கண்ட நான் உன் கண்களைக் கண்டிருந்தால் உன்னைக் கண்டம் கடத்த முயற்சித்திருப்பேனோ.. தெரியவில்லை.. உன் மிளிரும் முகமோ என்னைச் சிறைபிடித்து சிலையாக்கியது உன் கூந்தல் நிறம் கண்டு குதித்தேன் என்னைவிட கருத்தது என்று உன் கருவிழிகள் கண்டு கரைந்து கரை ஒதுங்கினேன் காரிருள் பெற்ற கண்ணை வெண்ணிலவுகள் வேவு பார்க்கின்றன வெள்ளை மேடுகளாய் புருவத்தில் படர்ந்த பட்டுக்கோடியோ என் பல்லைக் காட்ட வைக்கிறது உன் இதழோர சிரிப்போ என்னை இமயம்போல் சிலிர்க்க வைக்கிறது தாயே உன் திருமண படம் பார்த்தால் இவையே தோன்றுகிறது...

வினைப்பயன்

 ஆசை கொண்டு வந்து  அடர்ந்த காதலில் நின்று அசிங்கம் கண்டு போனேனோ அடர்ந்த வறுமை கொண்டு அதனால் தெருவில் நின்று அவமானம் கண்டு போனேனோ அதீத நம்பிக்கை கொண்டு அதையே நம்பி நின்று வேதனை கண்டு போனேனோ அக்கறை கொண்டு சென்று அதன்கன் அவனிடம் நின்று துக்கம் கண்டு போனேனோ ஆசை மோகம் காதல் அக்கறை தருபவை பல உண்டு. அதில் அனுபவமும் ஒன்று..!

ஓர் எறும்பின் எளிய கதை

 பலகாரம் பாத்தாச்சு படைகளையும் சேத்தாச்சு பலதூரம் போகனுமே தொடர்வண்டிய எடுத்தாச்சு நடைபோட்டு வந்தோமே நம்முணவ பாத்தோமே படையத மறிச்சாக்கா பாதைய மாத்திடுவோம் கட்டுடனே சென்றிடுவோம் கரையதனை கடக்கும்வரை கடிப்பது என் குறையோ.. கயவன் நீ இல்லையோ..?