ஆற்றங்கரை:
பனித்துளி போல் படர்ந்த நீரைப் புற்கள் உருட்ட
படர்ந்த நீர்த்துளி வடிந்த நீர்த்தாரை எட்ட
வடிந்த நீர் வலிமைப் பெற்று ஓடை எட்ட
ஓடை ஒற்றுமைக் கொண்டு ஓரிடம் சேர
ஆறது ஆனாகதை பின்னர் பாதை மாற
பள்ளம் விழ அருவியானவள் அவள்
எளிய நீரது வலிய பாறையைப் பேக்க
பலகாலம் தேக்க படர்ந்தது ஆற்று மணலோ
எளிதில் அள்ளிவிட்டால் ஏது அவளோ!
எவ்வழி சென்று சமுத்திரம் அடைவாளோ??
Comments
Post a Comment