வினைப்பயன்

 ஆசை கொண்டு வந்து  அடர்ந்த காதலில் நின்று
அசிங்கம் கண்டு போனேனோ

அடர்ந்த வறுமை கொண்டு அதனால் தெருவில் நின்று
அவமானம் கண்டு போனேனோ

அதீத நம்பிக்கை கொண்டு அதையே நம்பி நின்று
வேதனை கண்டு போனேனோ

அக்கறை கொண்டு சென்று அதன்கன் அவனிடம் நின்று
துக்கம் கண்டு போனேனோ

ஆசை மோகம் காதல் அக்கறை தருபவை பல உண்டு.
அதில் அனுபவமும் ஒன்று..!

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: