நாடு பிரித்து

 உலக நாட்டை கூறுபோட்டு உரிமைக்கொண்டோம்
உலகத் தலைவர் போல எண்ணி கூடிநின்றோம்
கோல் வீச குரங்கென ஓடி குதித்து நின்றோம்
அருகில் நின்ற நாட்டைச்சொல்லி அடித்துக்கொன்றோம்
இயன்ற அளவில் இன்னும் முயன்று
பிறர் எல்லைப் பிடித்தோம்
நாட்டை இழந்தவர் தம் வாய்ப்பைப் பெற்று மீண்டும் தொடர
ஓர் கட்டத்துக்குள் பல நாடுகள் கட்டியெழுப்பினோம்
நடுத்தர வீட்டுப்பிள்ளைகள் நாங்கள்
நாடாண்ட கதை இதுவே!!

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: